வாழ்த்துக்கள்
சொன்னேன் -
மகளிர் தினத்தன்று.
நேரில், ஒரு சிலருக்கு;
குறுஞ்செய்தி வழியாய்
மேலும் சிலருக்கு;
அலுவலக அறிவிப்புப்
பலகையில்
அலங்கார வாழ்த்து
ஒட்ட
அதிகம் மெனக்கெட்டேன்
– அதில்,
பெண்மையின் மேன்மையை
ஊருக்குப் பறைசாற்றினேன்!
மாலையில் வீடு
திரும்பியபின் தான் - என்
மரமண்டைக்கு உரைத்தது;
உயிர் தந்து உருவாக்கிய
தாயை,
உடன் உறைந்து நிறைவு
தரும் மனைவியை,
பெற்றெடுத்த நன்முத்துக்களை
வாழ்த்தவில்லையே
என்று!
சபதம் செய்தேன்
-
அடுத்த மகளிர்
தினத்தன்று - என்
முதல் வாழ்த்து
இவர்களுக்கே என்று!
மாற்றான் தோட்டத்து மல்லிகை தான் மணக்கும்
ReplyDelete