Monday 11 March 2013

அடுத்த மகளிர் தினத்தன்றாவது....



வாழ்த்துக்கள் சொன்னேன் -
மகளிர் தினத்தன்று.
நேரில்,  ஒரு சிலருக்கு;
குறுஞ்செய்தி வழியாய் மேலும் சிலருக்கு;
அலுவலக அறிவிப்புப் பலகையில்  
அலங்கார வாழ்த்து ஒட்ட
அதிகம் மெனக்கெட்டேன் – அதில்,
பெண்மையின் மேன்மையை
ஊருக்குப் பறைசாற்றினேன்!
மாலையில் வீடு திரும்பியபின் தான் - என்
மரமண்டைக்கு உரைத்தது;
உயிர் தந்து உருவாக்கிய தாயை,
உடன் உறைந்து நிறைவு தரும் மனைவியை,
பெற்றெடுத்த நன்முத்துக்களை
வாழ்த்தவில்லையே என்று!
சபதம் செய்தேன் -
அடுத்த மகளிர் தினத்தன்று - என்
முதல் வாழ்த்து இவர்களுக்கே என்று!

1 comment:

  1. மாற்றான் தோட்டத்து மல்லிகை தான் மணக்கும்

    ReplyDelete